உப்பு வேலி வாசித்து ஆகி விட்டது ( 240 பக்கங்கள் ). இங்கிலாந்து நாட்டு நூலகத்தில் , ஆவணக் காப்பாளராக (preservator of documents & history ) , பணி புரிந்த ராய் மாக்சம் , இந்தியாவில் ஆங்கிலேயர்களால் அமைக்கப் பட்ட உப்பு&சர்க்கரை வணிக வரி வேலியைத் தேடிக் கண்டு பிடிக்கும் நூல்.
சிறில் அருமையாக மொழி பெயர்த்து உள்ளார், எந்தக் குறையும் இல்லை.
இருந்தாலும் , இந்தியாவிற்கு வரும் எல்லா வெளிநாட்டினர்/வெளி நாட்டு வாசிகளும் புலம்பும்
சுகாதரமற்ற குடிநீர், கழிவறைகள், ஒழுங்கற்ற ஆட்டோ, டேக்சிகள் , பேருந்து ரயில் நிலையக் குப்பைகள் குறித்த புலம்பல்களை மூல ஆங்கிலத்தில் வாசித்தால் இன்னும் சற்று கோபம் ஏறலாம்.
வெற்றிக் கொடி கட்டில் , டக்லஸ் வடிவேலுவிடம் கேட்பாரே, அப்புறம் எதற்கு துபாயை விட்டு தென்காசி வந்தீரு .
இந்தியாவில் வருமானத்தை பெருக்கி, இங்கிலாந்தில் உள்ள தங்கள் உயர் அதிகாரிகள், ராஜ குடும்பத்தை மகிழ்வுடன் வைத்து இருப்போம் என்ற எண்ணத்தில் துவங்கும் உப்பு + சர்க்கரை வரி விதிப்பு எவ்வளவு கொடும் ஆசையாக மாறுகிறது என்பதை நன்கு விவரிக்கிறார்.
ஒரு ஆங்கிலேயராக இருந்து கொண்டு (ROY), தன் நாட்டு முன்னாள் அதிகாரிகள், அரச வம்சத்தினர் இந்தியாவை , இந்திய மக்களை எவ்வளவு சூறை ஆடி இருக்கின்றனர் என்று எழுதும் பரந்த மனப்பான்மையைப் பாராட்ட வேண்டும். பல தடைகள் வந்த பொழுதும், தன் ஆய்வை நிறுத்தாது விட முயற்சியுடன் , விரும்பிய இடத்தைக் கண்ட செயல் மிகவும் போற்றுதலுக்கு உரியது .
பல பக்கங்களில் இந்தியாவின் உணவுகளை , குணங்களை , நகர வீதிகளை, மக்களின் உடை வண்ணங்களை எழுதி இருக்கிறார். வேறு நாட்டு வாசகர்களுக்கு இது சுவாரஸ்யமாக இருக்கலாம் .
அவுட் சொர்ஸ்ட் (outsourced) ஆங்கிலப் படத்திலேயே, இந்தியாவை ஒரு ஆங்கிலேயர் எவ்வாறு பார்க்கிறார் /பார்ப்பார் என்று உணர்ந்து விட்டோம், அப்படத்தின் சாயல் இந்த நூல் எங்கும் விரவிக் கிடக்கிறது .
தென் இந்தியா குறித்து அதிகம் தகவல் இல்லை , ஒரு வேளை தென் இந்தியாவில் சத்தம் போடாது உப்பு வரி ஒழுங்காக கட்டி வந்தோமா என்று தெரிய வில்லை.
உற்பத்தி வரி, சுங்க வரித் துறையில் ஊழியர்களின் ஊழல் என்பது கழக & காமராஜர் ஆட்சிக்கு முன்னர் கிளைவ் ஆட்சியிலேயே நடந்து இருக்கிறது . எனவே அந்தத் துறையின் DNA அது.
காவல் புரிவோர்களின் மன நிலை, பிற பெண்களை அவர்கள் எவ்வாறு நோக்குவர் என்பது குறித்த விவரணைகள் அருமை.
உப்பு வேலி குறித்த தகவல்கள் /சோகம்/வருத்தம்/வேதனை மக்கள் மனதில் இருக்கக் கூடாது , வரும் தலைமுறைகளை மேலும் வருத்தம் அடையச் செய்யும். வரும் தலைமுறைகளின் மனதில் ஆங்கிலேயர், அரசு அதிகாரிகள், அதிகாரத்துவம் குறித்து வன்முறை எண்ணத்தை, விரோத மனப்பான்மை யை உருவாக்கும்
என்ற அடிப்படையில் கூட நேரு +அம்பேத்கார்+காந்தி , உப்பு வேலியை அழித்து இருக்கலாம் .
அல்லது ஆங்கிலேயரை மகிழ்ச்சிப் படுத்த / அவர்களது கட்டாயத்தால் உப்பு வேலி அழிக்கப் பட்டது
என்று NRI ட்விட்டர் டேக் பாணியில் கருத்து சொல்லலாம்.
உப்பு வேலியை ஏன் அழித்தார்கள் /மறைத்தார்கள் என்னும் ஆய்வை இனி துவங்கலாம் . நேற்றைய சென்னை விழாவில் இது குறித்து ராய்/சிறில்/ஜெமோ பேசினார்களா என்று தெரிய வில்லை. +K.R Athiyaman +Ramprasath Hariharan
நேரு+அம்பேத்கர், ஆட்சிக்கு வந்த உடன் முதல் வேலையாக உப்பு வரி, உப்பு வேலியை அழித்து உள்ளார்கள் என்று கூகிள் சொல்கிறது.
வங்கத்தில் தான் அதிகார வர்க்கத்தின் வரி விதிக்கும் கொடுமை அதிகமாக இருந்து உள்ளது, அந்த மரபால் தான் அங்கே பொது உடைமைக் கொள்கை விரைவாக தீவிரமாக பற்றிக் கொண்டதா என்ற ஐயம் எழுகிறது . இன்னமு கொல்கத்தாவில் அதனால் தான் முதலாளிகள், அரசு அதிகாரிகள் மீது ஒரு உள் வன்மம் நிலவுகிறது.
இங்கிருந்து எழுத்தாளர்கள் இங்கிலாந்து செல்லவும், பரஸ்பரம் விருதுகள் கிடைக்கவும் இது போன்ற முயற்சிகள் உதவலாம் .
மராத்தி மொழி பெயர்ப்பில்(2011) , வேலியை & வேலி வரலாறை ஏன் சுதந்திர இந்திய ஆட்சியார்கள் அழித்தார்கள் என்று மொழி பெயர்ப்பாளர் பகிர்ந்து உள்ளாராம், நண்பர்கள் அறிந்தால் பகிரவும் அது குறித்து